Nagaratharonline.com
 
கீரணிப்பட்டி பூச்சொரிதல் விழா ஏப்.,9ல் பங்குனி உற்சவம் ஆரம்பம்  Apr 4, 17
 
கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் , ஏப்.,9ல் பங்குனி உற்சவம் துவங்குகிறது.இளையாத்தங்குடி கைலாசநாத சுவாமி நித்யகல்யாணி அம்மன் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நேற்று முன்தினம் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சுற்றுப்புறக் கிராமத்தினர் டிராக்டர் போன்ற வாகனங்களிலும், பூத்தட்டுக்களுடனும் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பூக்கள் துாவி வழிபட்டனர். தொடர்ந்து பால்குடமும் எடுத்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிசேகம் நடந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு பூத்தட்டு எடுத்தனர்.
அதிகாலை 3:30 மணிக்கு மலர் அபிசேகம் நடந்து, சர்வ அலங்கார தீபாராதனைக்குப் பின்னர் அம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து ஏப்.,9ல் மாலையில் உற்சவ அம்மன் இளையாத்தங்குடியிலிருந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் கீரணிப்பட்டிக்கு எழுந்தருளி உற்சவம் துவங்கும்