Nagaratharonline.com
 
வேந்தன்பட்டி ஜல்லிக்கட்டில் 26 பேர் காயம்  Mar 1, 17
 
வேந்தன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் 26 பேர் காயமடைந்தனர்.

வேந்தன்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு நடத்த பொதுமக்களால் முடிவு செய்யப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் வடிவேல் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜல்லிக்கட்டில் 450 மாடுகள் பங்கேற்றன.

அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவக்குழுவினர், காவல் துணை கண்காணிப்பாளர் பாலகுரு தலைமையிலான போலீஸார், ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.