Nagaratharonline.com
 
அமராவதிபுதூர் : வேன் மோதியதில் கல்லூரி மாணவி சாவு  Apr 16, 10
 
சிவகங்கை மாவட்டம்,​​ காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் வெள்ளிக்கிழமை சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவி மீது ஆம்னி வேன் மோதியதில்,​​ அவர் உயிரிழந்தார்.

​ ​ அமராவதிபுதூரைச் சேர்ந்த பெரியகருப்பன் மகள் சுப்புமீனாள் ​(19).​ இவரது தாய் தெய்வானை அமராவதிபுதூரில் உள்ள பெண்கள் கல்லூரியில் நூலக உதவியாளராக உள் ளார்.​

இருவரும் அமராவதிபுதூரிலேயே தங்கியிருந்த நிலையில்,​​ சுப்புமீனாள் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு படித்து வந்தார்.​ ​ ​ ​

​ ​ அமராவதிபுதூரில் தாயாரைப் பார்த்துவிட்டு,​​ தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பெறுவதற்காக காரைக்குடி செல்ல பஸ் நிறுத்தம் வந்தபோது,​​ தேவகோட்டையிலிருந்து காரைக்குடி நோக்கி வந்த ஆம்னி வேன் சுப்புமீனாள் மீது மோதியது.​

இதில் பலத்த காயமடைந்த சுப்புமீனாள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

​ ​ ​ ​ இதுகுறித்து அமராவதிபுதூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப் பதிவு செய்து,​​ ஆம்னி வேன் ஓட்டுநரான காரைக்குடி சூடாமணிபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் ​(45) என்பவரைக் கைது செய்தார்.


source : Dinamani