Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டை : கம்பர் அருட்கோயிலில் குருபூஜை  Apr 12, 10
 
​ சிவகங்கை மாவட்டம்,​​ நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பர் அருட்கோயிலில் குருபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

​ ​ குருபூஜைக்கு முன்பாக நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் சிறப்புப் பூஜை செய்து பூரண கும்பத்துடன் கம்பர் அருட்கோயிலுக்குச் சென்று அபிஷேக ஆராதனை பூஜைகள் செய்யப்பட்டன.

​ ​ குருபூஜைக்கு கம்பர் சமுதாய மாநிலத் தலைவர் ரவீந்திரன் தலமை வகித்தார்.​ மாநிலச் செயலர் சங்கரன்,​​

இளைஞரணித் தலைவர் பாலா,​​ துணைச் செயலர் ​ முத்துகருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.​​ ​ குருபூஜையில் சிறப்புப் பஜனை பாடல்கள் பாடப்பட்டன.​ பின்னர் விநாடி-​ வினா நிகழ்ச்சி நடைபெற்றது.​ ​ ​ பூஜையில் கம்பர் வாழ்க்கை வரலாறு புத்தகம் எழுதிய காஞ்சிபுரம் ​ மா.வரதராஜனுக்கு மாநிலத் தலைவர் ரவீந்திரன் கேடயம் வழங்கினார்.​ பின்னர் அன்னதானம் நடைபெற்றது.​ ​

​ source ; dinamani