Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரியில் இலவச கண் சிகிச்சை முகாம்  Dec 14, 16
 
மேலைச்சிவபுரியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி ராயல் அரிமா சங்கம், ராயல் சுப்ரீம் லயனஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய முகாமுக்கு ராயல் அரிமா சங்கத் தலைவர் ஆர்எம்எஸ். அன்புச்செல்வன் தலைமை வகித்தார்.
முகாமில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் 272 பேருக்கு கண் பரிசோதனை செய்து மருந்து மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். 75 பேர் அறுவைச் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.