Nagaratharonline.com
 
NEWS REPORT: பொன்னமராவதி வட்டார கோயில்களில் சிறப்பு வழிபாடு  Dec 14, 16
 
பொன்னமராவதி பகுதியில் உள்ள கோயில்களில் கார்த்திகை சோமவாரம் மற்றும் திருக்கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி ஆவுடைநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி யாகபூஜைகள், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சங்காபிஷேகம் நடைபெற்றது. அதேபோல, திருக்கார்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தேனிமலை முருகன் கோயில், வையாபுரி சுப்பிரமணியர் கோயில்களில் மாலை 6.15 மணியளவில் விளக்கேற்றி சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு நடைபெற்றது. மேலும், வலையபட்டி மலையாண்டி கோயில், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில், வையாபுரி சுப்பிரமணியர் கோயில், பொன்னமராவதி பாலமுருகன் கோயில், புதுப்பட்டி சிவன் கோயில், வேந்தன்பட்டி நந்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.