Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் காலாவதி மருந்துகளுக்கு தீ  Apr 1, 10
 
பொன்னமராவதி காந்திசிலை அருகே சாலை மற்றும் முட்புதர்களில் காலாவதியான மாத்திரைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு கிடந்தன. இதில் நூற்றுக்கணக்கான மாத்திரைகள் எரிக்கப்பட்டும் கிடந்தன. தமிழகம் முழுவதும் அனைத்து பகுதகளிலும் உள்ள மருந்து கடைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டுவரும் வேளையில் பொன்னமராவதியில் சாலையோரம் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மாத்திரைகள் கொட்டப்பட்டது குறித்து தகவலறிந்ததும் புதுக்கோட்டை மருந்து ஆய்வாளர் ஸ்ரீதரன் தலைமையிலான குழுவினர் மாத்திரைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இப்பகுதியில் உள்ள மருந்து கடைகளை திடீர் சோதனை நடத்தினர். நடுரோட்டில் அதிக அளவு காலாவதியான மாத்திரைகள் கொட்டப்பட்டு கிடப்பதை பொதுமக்களும் பார்த்தனர். இதேபோல் பொன்னமராவதி மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பாலத்தின் அடியிலும் மாத்திரைகள் எரிக்கப்பட்டு கிடந்தன.

source : Dinamalar