Nagaratharonline.com
 
அடிப்படை வசதி இல்லாத புதுவயல் சந்தை  Mar 31, 10
 
அடிப்படை வசதி குறைவால் புதுவயல் வாரச் சந்தையில், நுகர்வோர், வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். இங்கு புதன் கிழமையில் சந்தை கூடுகிறது. கடைகளுக்கு நிரந்தர மேற்கூரை இல்லாததால், தார்பாய், ஓலைகளை கொண்டு தற்காலிக கூரை அமைத்துள்ளனர். நிரந்தர கட்டடம் கிடையாது. ஓலை குடிசை இருப்பதால், அடிக்கடி தீ விபத்து நடக்கிறது. துர்நாற்றம்: இங்கு குவியும் குப்பை, இறைச்சி கழிவுகள் அகற்றப்படுவதில்லை. நீண்ட நாட்களாக கிடப் பதால் துர்நாற்றம் வீசுகிறது. நுகர்வோர் நலன் கருதி அடிப்படை வசதிகளை செய்ய, பேரூராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

source : Dinamalar