Nagaratharonline.com
 
வைரவன்பட்டியில் தேரோட்டம்  Aug 7, 16
 
வைரவன்பட்டி அருள்மிகு வடிவுடையம்மை சமேத வளரொளிநாதர் திருக்கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா ஜூலை 27-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி புறப்பாடும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை திருத்தேரோட்டத்தை முன்னிட்டு காலை 6.10 மணிக்கு சுவாமி திருத்தேர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்தனர். பின்னர் மாலை 4.14 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை பஞ்சமூர்த்திகள், மற்றும் வைரவர் சுவாமிக்கு மகா அபிஷேகமும், மாலை 6.15 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஏழக பெருந்திருவான வைரவன் கோவில் நகரத்தார்கள் செய்து வருகின்றனர்.