Nagaratharonline.com
 
வலையப்பட்டி : அண்டா திருட்டு:வாலிபர் கைது  Mar 29, 10
 
பொன்னமராவதி வலையப்பட்டி 1ம் வீதியை சேர்ந்தவர் வள்ளியப்ப செட்டியார் மகன் சுரேஷ் (32). இவர் தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு வலையப்பட்டி 1ம் ரோட்டில் உள்ளது. இவர் குடும்பத்தோடு கொன்னையூர் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அப்போது இவரது வீட்டில் இருந்த அண்டாவை காணவில்லையாம். உடனே இவரது வீட்டில் குடியிருந்த ராமசாமி மகன் விஜயக்குமார்(33) என்பவரை சந்தேகப்பட்டு கேட்டபோது, முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளார். உடனே பொன்னமராவதி போலீசில் சுரேஷ் புகார் கொடுத்ததன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


source : Dinamalar