Nagaratharonline.com
 
தேவகோட்டைகோயில் பகுதிகளில் திறந்தவெளி 'பார்' : பெண்கள் நடக்க அச்சம்  Jul 19, 16
 
தேவகோட்டையில் டாஸ்மாக் கடைகளில் பார் வசதிகள் இருந்தும்,பலர் கோயில் பகுதி , ரோடுகளில் உள்ள சிறு பாலங்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.

மதுவை வாங்கி விட்டு, பாரில் மற்ற பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் வெளியே கடைகளில் வாங்கி வந்து கண்ட கண்ட இடங்களில் அமர்ந்து மது அருந்தி வருகிறார்கள். இரவு வெகுநேரம் திறந்த வெளி பார்கள் நடக்கிறது. பெண்கள் நடமாக அச்சப்படுகின்றனர்.
நகரின் முக்கிய பகுதிகள், சிலம்பணி
விநாயகர் கோயில் பின்புறம் உள்ள ஊரணியைச் சுற்றி சிமென்ட் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் மதுவை வாங்கி வந்து அருந்துகின்றனர். அருகில் சாப்பாட்டு கடையும் இருப்பதால் நாளுக்கு நாள் அப்பகுதியில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. தேவகோட்டை நகருக்கு கூடுதல் போலீஸ் நியமித்து மாலை நேரங்களில் ரோந்து சுற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.