Nagaratharonline.com
 
கண்டனூரில் ரோடு அமைக்கதடை கோரி வழக்கு  Jul 6, 16
 
கண்டனுார் வழக்கறிஞர் அருண்சாமிநாதன். இவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
கண்டனுாரில் 1995 ல் முறையான சாக்கடை வசதி இன்றி, ரோடு அமைத்தனர். கண்டனுார் பேரூராட்சி நிர்வாகம், தற்போது புதிதாக ரோடு அமைக்க முடிவு செய்துள்ளது. இதனால், ரோடு மட்டம் மேலும் உயரும். மழை நீர், கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடும். பாரம்பரிய, கலைநயமிக்க வீடுகள் பாதிக்கப்படும். மக்கள் பணம் விரையமாகும். ரோடு அமைக்க தடை விதிக்க வேண்டும். முறைப்படி கழிவுநீர் கால்வாய் அமைத்தபின், ரோடு அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனு செய்திருந்தார்.
நீதிபதி டி.ராஜா,“தற்போதைய நிலை தொடர வேண்டும்,” என உத்தரவிட்டார்.