Nagaratharonline.com
 
வைரவன்பட்டியில் "நாதஸ்வரம்' டி.வி. தொடர் படப்பிடிப்பு  Mar 23, 10
 
சிவகங்கை மாவட்டம்,​​ திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் திருமுருகன் படக் குழுவினரின் தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு நடைபெற்றது.

​ ​ ​ ​ ஷநாதஸ்வரம்' என்ற தொலைக்காட்சி நெடுந்தொடருக்கான படப்பிடிப்பு ​ வைரவன்பட்டி சிவன் கோயிலில் பூஜையுடன் தொடங்கியது.

இத் தொடரை மெட்டி ஒலி திருமுருகன் இயக்குகிறார்.​ முக்கியக் கதாபாத்திரத்தில் மெüலி,​​ பூவிலங்கு மோகன் மற்றும் புதுமுகங்கள் நடிக்கின்றனர்.

​ ​ ​ ​ இத் தொடரைப் பற்றி திருமுருகன் கூறுகையில்,​​ மெட்டி ஒலிக்குப் பிறகு நான் இயக்கும் நாதஸ்வரம் என்னும் இந்த தொலைக்காட்சி தொடர் முற்றிலும் குடும்பப் பாங்கான செட்டிநாட்டுப் பழக்க வழக்கங்களைக் கொண்ட ஒரு நாதஸ்வரக் கலைஞரின் கதையை மையமாகக் கொண்டது.​ ​​ ​ ​ வைரவன்பட்டி,​​ செட்டிநாடு,​​ பேராவூரணி,​​ காரைக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும்.​

மெட்டி ஒலி போன்றே மக்களின் மனதில் இத் தொடர் இடம் பிடிக்கும்.​​ ​ ​ இத் தொடர் ஏப்ரல் மாதத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது என்றும் திருமுருகன் கூறினார்

source : Dinamani