Nagaratharonline.com
 
பொன்னமராவதி : மண் சாலையாக மாறிய 'தார் சாலை'  Mar 18, 10
 
பொன்னமராவதி : பொன்னமராவதி மெயின்ரோட்டில் தார் சாலை மண் சாலையாக மாறியதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே, மண் குவியலை அகற்ற அகற்ற நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி பஸ் நிலைய மெயின் ரோட்டில் அதிமுக அலுவலகம் முன்பும், புதுவளவு செல்வ விநாயகர் கோயில் அருகேயும், டெலிபோன் அலுவலகம் முன்பும் தார் சாலை மண் சாலையாக மாறி மணல் குவியலாக காட்சியளிக்கிறது.

இந்த மண் சாலையால் பைக் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் மணலில் சறுக்கி கீழே விழுந்து காயமடைந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நல்ல மழை பெய்தபோது மெயின்ரோடு குண்டும், குழியுமாக சேறுடன் காட்சியளித்தது. இதனை சரி செய்ய தார் சாலையில் மணல் குவியல்களை அள்ளிப்போட்டனர். மழை காலம் முடிந்து வெயில் அடிப்பதால் அந்த மண் தற்போது மணல் குவியலாகி விட்டது. எனவே, மணல் குவியலை அகற்ற நெடுஞ்சாலைத்துறையும், பேரூராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

source : Dinamalar