Nagaratharonline.com
 
NEWS REPORT: நெற்குப்பை ஸ்ரீ மெய்ஞான மூர்த்தி விநாயகர் ஆலய திருக்குட நன்னீராட்டு பெருவிழா  Feb 14, 16
 
 
10/02/2016 அன்று நெற்குப்பை ஸ்ரீ மெய்ஞான மூர்த்தி விநாயகர் ஆலய திருக்குட நன்னீராட்டு பெருவிழா, குன்றக்குடி ஆதீனம் 46 வது குரு மகா சன்னிதானம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் முன்னிலையில், சிறப்பாக நடைபெற்றது. அன்றிரவு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

முதல் நாள் மாலை, பேராசிரியர் சொ. சொ. மீ. சுந்தரம் அவர்களின் ஆன்மீகச் சொற்பொழிவும் பிறகு இன்னிசைப் பட்டி மன்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது


நெற்குப்பை பனை. ப. பனையப்ப செட்டியார் கட்டி எழுப்பிய ஆலயத்தை, மீண்டும் அக்குடும்பத்தார் புதுப்பொலிவுடன் ஆலயத்தை சீரமைத்து, திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடத்தினர் .