Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் வீடு புகுந்து திருட்டு  Mar 18, 10
 
பொன்னமராவதியில் சமையல் அறை எக்ஸாசிஸ்ட் பேனை கழற்றி வீட்டினுள் புகுந்து ரூ.50ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது@ பொன்னமராவதி ஜெஜெநகரை சேர்ந்தவர் சிதம்பரம்(56). இவர் வீட்டை பூட்டி விட்டு மேலச்சிவபுரி கோயிலுக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய போது சமையல் அறையில் உள்ள எக்ஸாசிஸ்ட் பேனை கழற்றி இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். இதனையடுத்து வீட்டை சோதனை செய்த போது மர்ம ஆசாமிகள் பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 3பவுன் தங்க நகைகள், 4ஆயிரம் ரூபாய் பணம், செல்போன், வெள்ளி முலாம் பூசப்பட்ட பிள்ளையார் ஆகியவற்றை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து சிதம்பரம் பொன்னமராவதி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

source: Dinamalar