Nagaratharonline.com
 
NEWS REPORT: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் பாலாலயம்  Feb 14, 16
 
நமது நகரக்கோவில்களில் ஒன்றான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடங்குவதை முன்னிட்டு, வியாழக்கிழமை பாலாலய நிறைவு விழா நடைபெற்றது.

குடவரைக் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறுகின்றன.

இதையொட்டி, புதன்கிழமை காலை 9 மணிக்கு அனுக்ஞை பூஜை மற்றும் யாகசாலை பூஜையுடன் பாலாலய விழா தொடங்கியது. வியாழக்கிழமை காலை கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதில் சோமேஸ்வர குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கலசங்களுக்கு பூஜை நடத்தினர். அத்துடன் பாலாலய விழா நிறைவு பெற்றது. இவ்விழா ஏற்பாட்டினை கோயில் அறங்காவலர்கள் பூலாங்குறிச்சி வி.ராமநாதன் செட்டியார் காரைக்குடி எம்.தண்ணீர்மலை செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.