Nagaratharonline.com
 
கொன்னையூர் கோயிலில் 21ம்தேதி பூச்சொரிதல் விழா  Mar 17, 10
 
:புதுகை மாவட்ட திருத்தலங்களில் ஒன்று கொன்னையூர் முத்து மாரியம்மன்கோயில். விழாக் காலங்களின் போது இரவுநேரத்தில் முத்துமாரியம்மன் வீதியுலாவின் போது பக்தர்கள் தங்களது நேர்த்திகடனாக தீப் பந்தங்களுடன் உடன் வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இக்கோயிலில் பூச்சொரிதல் விழா வரும் 21ம்தேதி நடை பெறுகிறது. 22ம்தேதி அக்னி காவடிதிருவிழா நடக்கிறது.தொடர்ந்து பங்குனி திருவிழா வரும் 28ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.தினமும் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.

source : Dinamalar