Nagaratharonline.com
 
ரோடு விரிவாக்க பணிகளால் ஒக்கூர், சோழபுரம், மதகுபட்டியில் கேபிள் இணைப்பு துண்டிப்பு  Jan 16, 16
 
சிவகங்கை - திருப்புத்தூர் இடையே ரோடு விரிவாக்க பணியின் போது, தொலைபேசி இணைப்பு கேபிள் துண்டானதால், பணிகள் பாதித்துள்ளன. சிவகங்கை - திருப்புத்தூர் ரோட்டில் ரோடு விரிவாக்க பணி நடக்கிறது. இப்பகுதியில் பாலம் கட்டும் பணிக்காக அடிக்கடி பள்ளம் தோண்டுவதின் மூலம் தொலைபேசி இணைப்பிற்கான கேபிள்கள் துண்டிக்கப்படுகிறது. இவற்றை சீரமைக்காமல் விட்டுள்ளதால் ஒக்கூர், சோழபுரம், மதகுபட்டியில் பி.எஸ்.என்.எல்., இணையதள வசதி துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், வங்கி பணி <உட்பட இணையதளத்தை பயன்படுத்தும் அனைத்து நிறுவன பணிகளும் தகவல் பெற முடியாமல் தவிக்கின்றனர். அடிக்கடி இது நடப்பதால் பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் தாமதமின்றி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.