Nagaratharonline.com
 
குழிபிறையில் இந்தியன் வங்கி ஏடிஎம் திறப்பு  Mar 16, 10
 
புதுக்கோட்டை மாவட்டம்,​​ குழிபிறை இந்தியன் வங்கி கிளையில் தானியங்கி காசாளும் இயந்திர சேவை திங்கள்கிழமை தொடங்கியது.

​ ​ விழாவுக்கு,​​ முன்னாள் ஊராட்சித்தலைவர் ஒய்.எஸ்.டி.எல்.​ சிதம்பரம் தலைமை வகித்தார்.​ மையத்தை அவர் தொடக்கிவைத்தார்.​ இந்தியன் வங்கி திருச்சி வட்டார உதவிப் பொது மேலாளர் சி.டி.​ முத்து முன்னிலை வகித்தார்.​ சிறப்பு விருந்தினர்களாக திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் ராமசுப்புராம்,​​ குழிபிறை ஊராட்சித் தலைவர் ஆர்.​ பாண்டிச்செல்வி,​​ தொழிலதிபர்கள் ஆர்.எம்.​ முத்துராமன்,​​ இரா.​ பாவாணன் ஆகியோர் பங்கேற்றனர்.

source : Dinamani