Nagaratharonline.com
 
NEWS REPORT: மஸ்கட்டில் பிள்ளையார் நோன்பு மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம்  Jan 3, 16
 
சுல்டானட் ஆப் ஓமனின் தலைநகரான மஸ்கட்டில் பிள்ளையார் நோன்பு டிசம்பர் 17ம் தேதி வியாழக்கிழமை, மஸ்கட் நகரத்தார் கூட்டமைப்பு சார்பாக, இராயவரம் வேலு .இராமநாதன் அவர்களது மஸ்கட் அல்க்ஹுவைர் இல்லத்தில் சிறப்பாக நடை பெற்றது. விழாவில் சுமார் 140 நகரத்தார் பங்கேற்று இலை எடுத்து கொண்டனர்.

2016 க்கான புத்தாண்டு கொண்டாட்டமும் டிசம்பர் 31 ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 :30 மணியளவில் தொடங்கி அதிகாலை 12 :30 மணி வரை, மஸ்கட் நகரத்தார் கூட்டமைப்பு (Association ) சார்பாக ,Al Qurum Grill House Restaurant விழா அரங்கில் வெகு சிறப்பாக நடை பெற்றது.

விழாவில் உறுப்பினர் குடும்பத்திலுள்ள இளைய தலைமுறையினர் மற்றும் குழந்தைகள் பல்வேறு கலை நிகழ்ச்சியில் பங்கு கொண்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை மகிழ்வித்தனர்.

பெருவாரியான நகரத்தார் உறுப்பினர் குடும்பங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மஸ்கட்டில் குடியேறும் புதிய நகரத்தார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இணைய தள முகவரி:
http://muscatnagaratharassociation.webs.com