Nagaratharonline.com
 
பொன்னமராவதி பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.  Dec 31, 15
 
பொன்னமராவதியில் புனரமைப்பு பணிகள் நிறைவுற்ற பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.

பொன்னமராவதி பேரூராட்சி மூலம் இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ்,ரூ. 62.95 லட்சத்தில் பேருந்து நிலையத்தில் பேவர் பிளாக் தளம் அமைத்தல், பயணியர் இருக்கை அமைத்தல் உள்ளிட்ட புனரமைப்புப் பணிகள் நடைபெற்று அண்மையில் நிறைவுற்றன.

இதையடுத்து,தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.