Nagaratharonline.com
 
தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் மகளிர் சிறப்பு பட்டிமன்றம்  Dec 26, 15
 
தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் கல்வி வள்ளல் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை பேராசிரியர்கள் பங்கேற்ற சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

இக்கல்லூரியில் கல்வி வள்ளல் திருவிழா மகளிர் விழாவாக நடைபெற்றது. இதில் வேலைக்குச் செல்லும் பெண்களால் குடும்பத்தில் குதூகலமா, குழப்பமா என்ற தலைப்பில் மகளிர் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

பட்டிமன்ற நடுவராக, மதுரை செந்தமிழ்க் கல்லூரி உதவிப் பேராசிரியர் சுப்புலெட்சுமி இருந்தார். இதில், குதூகலமே என்ற தலைப்பில், மதுரை யாதவா கல்லூரிப் பேராசிரியை சத்தியபாமா, கல்லூரி மாணவிகள் அஹானா பிரியதர்ஷினி மற்றும் மீனலோச்சினி ஆகியோர் பேசினர்.

குழப்பமே என்ற தலைப்பில், மதுரை திருமலைநாயக்கர் கல்லூரிப் பேராசிரியர் சங்கீத் ராதா, கல்லூரி மாணவிகள் சார்மதி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் பேசினர். முடிவில், வேலைக்குச் செல்லும் பெண்களால் குடும்பத்தில் குதூகலமே என நடுவர் தீர்ப்பளித்தார்.