Nagaratharonline.com
 
குழிபிறை : மூதாட்டியிடம் செயின்பறிப்பு  Mar 16, 10
 
குழிபிறையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருமயம் அருகே குழிபிறை உமையாள் ஆச்சி வீதியை சேர்ந்தவர் சுந்தரம் செட்டியார். அவரது மனைவி அலமேலு (70). வீட்டில் தனியாக இருந்தாராம். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த டிப்டாப் வாலிபர்கள் இருவர் அலமேலு ஆச்சியிடம் ஒரு சீட்டில் முகவரியை காண்பித்து எங்கு உள்ளது என கேட்டனர். அப்போது அலமேலு ஆச்சி பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று அவரது கழுத்திலிருந்த 5 பவுன் தங்கசங்கிலியை அவர்கள் பறித்து கொண்டு எஸ்கேப் ஆயினர். இதன் மதிப்பு 60 ஆயிரம் ரூபாய் ஆகும். இது குறித்து அலமேலு ஆச்சி பனையப்பட்டி போலீசில் புகார் செய்தார். வழக்கை பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கணேசன் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் பொன்னமராவதி பகுதிகளில் போலீசார் இரவு நேர ரோந்து சென்ற போது சந்தேகப்படும் படியான இருவாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


source : Dinamalar