Nagaratharonline.com
 
வேந்தன்பட்டியில் நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி  Dec 15, 15
 
வேந்தன்பட்டி செயின்ட் ஜோசப் பள்ளியில் நீர்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி மினி மாரத்தா ன் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேந்தன்பட்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, அன்னை கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டிக்கு அன்னை அறக்கட்டளையின் தலைவர் டி.ஜோசப் சேவியர் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் சி. அமலஜோசப் வரவேற்றார். பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் டி. இளங்கோவன் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

வேந்தன்பட்டி செயின்ட் ஜோசப் பள்ளியில் தொடங்கி, பொன்னமராவதி காந்திசிலை வரை நடைபெற்ற போட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.