Nagaratharonline.com
 
NEWS REPORT: ராமாயண ஒப்புவித்தல் போட்டி:ஜன.31ல் நடக்கிறது  Dec 13, 15
 
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில், கம்பராமாயண ஒப்புவித்தல் போட்டி, ஜன.31ல் கல்லுக்கட்டி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடக்கிறது.

9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, யுத்தகாண்டம், வீடணன் அடைக்கல படலத்தில் 20 பாடல்கள், சென்னை
கம்பன் கழக பதிப்பில் ""உறு பொருள்'' என்று தொடங்கும் 83ம் பாடல் முதல் "ஆதலான் இவன் வரவு' என்று தொடங்கும் பாடல் முடியவும், ஆறு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, அயோத்தியா காண்டம் குகப்படலத்தில் 20 பாடல்கள், சென்னை கம்பன் கழக பதிப்பில் 318ம் பக்கத்தில் உள்ள ""ஆயகாலையின்'' என்று தொடங்கும் ஒன்றாம் பாடல் முதல் பக்கம் 321ல் ""திருநகர் தீர்ந்த'' என்று தொடங்கும் பாடல் முடியவும் ஒப்பித்தல் போட்டி இரு பிரிவாக நடக்கிறது.

விபரம், குறிப்பு வேண்டுவோர், கம்பன் கழகம், 1 ஈ, செட்டிநாடு டவர்ஸ், 5 வள்ளுவர் தெரு, சுப்பிரமணியபுரம் வடக்கு, காரைக்குடி - 2 என்ற முகவரிக்கு எழுதியோ, 94450 22137 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பியோ பெறலாம். பள்ளிகள் தங்கள் பள்ளியி
லிருந்து இரண்டு மாணவர்களை தேர்வு செய்து அனுப்பலாம், என
கம்பன் கழக செயலாளர் பழ.பழனியப்பன் தெரிவித்தார்.