Nagaratharonline.com
 
தெக்கூர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு  Dec 13, 15
 
தெக்கூர் ஸ்ரீவிசாலாட்சி கலாசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில், 1959 முதல் 2015 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு, விழா தலைவராக மனோகரன் அறிமுகப்படுத்தப்பட்டார்.

முன்னதாக, தலைமை ஆசிரியர் வி. அசோகன் வரவேற்புரையாற்றினார். பள்ளிச் செயலர் டி.எஸ். சேது முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் குறித்து எம். மந்திரி, விழா அறிமுக உரையாற்றினார். பின்னர், பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில், தலைவராக மனோகரனும், செயலராக ஹரிராமும், ஓருங்கிணைப்பாளராக எம். மந்திரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிகழ்ச்சி முடிவில், ஒழுகமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் தியாகராஜன் நன்றி கூறினார்.