Nagaratharonline.com
 
NEWS REPORT: நெற்குப்பையில் வெள்ள நிவாரண பொருள்கள் சேகரிப்பு  Dec 11, 15
 
நெற்குப்பையில் இருந்து கடலூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவராண பொருள்களை இளைஞர்கள் வெள்ளிக்கிழமை கொண்டு சென்றனர்.

நெற்குப்பை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சுமார் 20 -க்கும் மேற்பட்டோர் கடலூர் பகுதியில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நிவாரணப் பொருள்கள் சேகரிப்பதில் கடந்த ஓரு வாரமாக ஈடுபட்டிருந்தனர்.

நெற்குப்பை, நீலமேகப்பட்டி, பள்ளத்துப்பட்டி, பரியாமருதுபட்டி, புரந்தன்பட்டி, பூசணிக்களம் ஆகிய பல்வேறு பகுதிகளுக்கு சென்று அரிசி, சோப்பு, துணிகள்,பிஸ்கட் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் பாட்டில்கள், பினாயில், தண்ணீர் பாட்டில்கள், போர்வைகள், மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருள்களை சேகரித்தனர். சேகரிக்கப்பட்ட சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருள்களை கடலூர் மக்களுக்கு வழங்குவதற்கு இரண்டு வேன்களில் வெள்ளிக்கிழமை எடுத்து சென்றனர்.