Nagaratharonline.com
 
பொன்னமராவதி பகுதியில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்  Dec 8, 15
 
பொன்னமராவதி பகுதியில் சேதமடைந்து காணப்படும் வேந்தன்பட்டி - வார்ப்பட்டு சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வேந்தன்பட்டி வழியே வார்ப்பட்டு செல்லும் சாலை மிகவும் முக்கியமான சாலையாகும். இச்சாலை வழியே சிங்கம்புணரி, மதுரை, திண்டுக்கல், கொட்டாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பிரான்மலை செல்லவும் இச்சாலை வழியேதான் செல்லவேண்டும். இச்சாலையில் வேந்தன்பட்டியிலிருந்து வார்ப்பட்டு வரை மிகவும் சேதமடைந்து குண்டும்,குழியுமாக காணப்படுகிறது. அதேபோல,ஆலவயல் - தூத்தூர் வழியே பொன்னமராவதி செல்லும் சாலை, கண்டியாநத்தம் - புதுப்பட்டி சாலை, பொன்.புதுப்பட்டி - வேகுப்பட்டி உள்ளிட்ட சாலைகளும் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.

எனவே, சேதமடைந்து காணப்படும் இச்சாலைகளை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.