Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் அமரகண்டான் குளம் நிரம்பியது  Dec 8, 15
 
பொன்னமராவதி அமரகண்டான் குளம் கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையால் நிரம்பியதை அடுத்து, திங்கள்கிழமை முதல் உபரிநீர் வெளியேறி வருகிறது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. பொன்னமராவதியில் கடந்த 3 நாள்களாக பெய்துவரும் மழையால், அமரகண்டான் குளம் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. அதேபோல, பொன்னமராவதி அருகே உள்ள மணக்கண்மாயும் நிரம்பி வழிகிறது. இதை பொதுமக்கள் கூட்டமாகப் பார்த்துச்செல்கின்றனர். பொன்னமராவதி ஒன்றியத்தில் இந்த இரண்டு நீர்நிலைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. பெரும்பாலான கண்மாய்களில் பாதி அளவுகூட நீர்மட்டம் உயரவில்லை. வடகிழக்குப் பருவமழை பெரும்பாலும் சாரல் மழையாகப் பெய்து இப்பகுதி விவசாயிகளை ஏமாற்றம் அடையச்செய்து வருகிறது.