Nagaratharonline.com
 
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நல்வாழ்வு பெற, பிள்ளையார்பட்டியில் ருத்ர ஜெப அபிஷேக  Dec 8, 15
 
பிள்ளையார்பட்டி கோயிலில் கற்பக விநாயகருக்கு, சென்னை மற்றும் பிற பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நல்வாழ்வு பெற வேண்டி வியாழக்கிழமை சிறப்பு ருத்ர ஜெப அபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கோவில் சிவாச்சாரியார்கள் பிச்சை குருக்கள், சோமசுந்தரகுருக்கள் ஆகியோர் சிறப்பு வேள்வி நடத்தினர். ஏற்பாடுகளை கற்பக விநாயகர் கோயில் அறங்காவலர்கள் பூலாங்குறிச்சி ராமநாதன் செட்டியார், காரைக்குடி தண்ணீர்மலை செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.