Nagaratharonline.com
 
நெற்குப்பை கிளை நூலகத்தில் முப்பெரும் விழா  Dec 8, 15
 
நெற்குப்பை கிளை நூலகத்தில் முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நெற்குப்பையில் உள்ள சோம.லெ. நினைவு கிளை நூலகத்தில் 48ஆவது தேசிய நூலக வார விழா, சோமலெ.வின் 29ஆவது நினைவு நாள், குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவின் 93ஆவது பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

நூலக அரங்கில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சாத்தப்பா அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா தலைமை வகித்தார். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, நீலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நூலகர் கண்ணன் அறிமுகவுரையாற்றினார். மாணவர்களும் நூலகமும் என்ற தலைப்பில் பழனியப்பன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கணினி பயிற்றுநர் வினோத் கண்ணன் நன்றி கூறினார்.