Nagaratharonline.com
 
NEWS REPORT: மதகுபட்டி நகர சிவன் கோவில் கந்தர் சஷ்டி விழா  Nov 12, 15
 
சொக்கலிங்கபுரம் மதகுபட்டி அருள்மிகு ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் நகர சிவன் கோவிலில் கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு 12/11/2015 அன்று அபிஷேக ஆராதனைகள் துவங்கின. 18/11/2015 அன்று திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

இந்த ஒரு வார கால, அபிஷேக ஆராதனைகள் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகளை கடந்த மூன்று தலைமுறைகளாக மதகுபட்டி சுப. லெ. சுப. ஆறு. சுப்பிரமணியன் செட்டியார் குடும்பத்தார் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

திரளான நகரத்தார் பெருமக்களும் மற்றவர்களும் விழாவில் கலந்து கொண்டு இறைஅருள் பெற்று வருகிறார்கள்.

news submitted by SP.Shanmugam. madhakupatti