Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரியில் யோகா பயிற்சி முகாம்  Mar 14, 10
 
பொன்னமராவதி,மார்ச் 13: பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் யோகா பட்டயப் படிப்பு மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொடக்க நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் தா. மணி தலைமை வகித்தார்.

புதுக்கோட்டை யோகா மையப் பேராசிரியர் எம். செல்லவராஜ் பயிற்சியைத் தொடங்கிவைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட யோகா பயிற்றுநர் ஆர். பாண்டியன் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயிற்சி பெற்றனர்.

முன்னதாக, கல்லூரி உடற்கல்வி இயக்குநர் நா. விஜயரகுநாதன் வரவேற்றார். நிறைவில், மாணவர் சி. சதீஷ்குமார் நன்றி கூறினார்

Source:Dinamani