Nagaratharonline.com
 
புத்தாண்டில் திருப்புத்தூர் புறவழிச்சாலை  Oct 20, 15
 
திருப்புத்தூரைச் சுற்றி செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கான புறவழிச்சாலை புத்தாண்டில் போக்குவரத்து பயன்பாட்டிற்கு வர உள்ளது. தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை திருப்புத்தூர் நகர் வழியாக செல்கிறது. இந்த ரோடு நகரினுள் செல்லாமல் திருப்புத்தூர் நகருக்கு வெளியே புறவழிச்சாலை மூலம் செல்கிறது. புதுக்கோட்டை ரோட்டில் என்.புதூரில் துவங்கி, காரைக்குடி ரோட்டில் தம்பிபட்டி எல்லை,தென்மாப்பட்டு தம்மம் ஊரணி அருகே சென்று சிவகங்கை ரோட்டில் புதுக்காட்டாம்பூரை அடுத்து சந்திக்கிறது.

இப்புறவழிச்சாலை தற்போது 80 சதவீத வேலைகள் முடிந்துள்ளது. சுமார் 60 நாட்களுக்குள் பால வேலைகள் , விடுபட்ட பகுதிகளில் தார்ச்சாலை பணிகள் முழுமையடைய உள்ளது. புத்தாண்டில் புறவழிச்சாலையை மக்கள் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. திருப்புத்தூர் நகரினுள் காணப்படும் போக்குவரத்து நெருக்கடி வெகுவாகக் குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.