Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் "விபத்தில்லா தீபாவளி'  Oct 18, 15
 
பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் "விபத்தில்லா தீபாவளி' குறித்த விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி சிட்டி அரிமா சங்கம், பொன்னமராவதி தீயணைப்பு மீட்பு நிலையம் மற்றும் வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி ஆகியன இணைந்து நடத்திய விழிப்புணர்வு முகாமிற்கு சிட்டி அரிமா சங்கத் தலைவர் பி. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். முகாமில் பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் கரு. பெரியதம்பி தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் பங்கேற்று, விபத்தில்லாமல் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடும் முறை, தீ தடுக்கும் முறைகள் ஆகியன குறித்து செயல் விளக்கமாக செய்து மாணவ, மாணவியருக்கு அறிவுறுத்தினர்.