Nagaratharonline.com
 
திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோயிலில் பக்தர்கள் கூட்டம்  Oct 4, 15
 
திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளமிய நாராயண பெருமாள் கோயிலில், புரட்டாசி மாதம் 3 ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இக்கோயில் உற்சவ மூர்த்தி பெருமாள் தங்க விமானத்தில் பழங்களாலும் மற்றும் மூலிகைச் செடிகளாலும் அலங்கரிக்கப்பட்டு, தங்கக் கவச ராஜ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.