Nagaratharonline.com
 
புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக்.​ பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா  Mar 14, 10
 
காரைக்குடி,மார்ச் 14:​ சிவகங்கை மாவட்டம்,​​ காரைக்குடி அருகே புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக்.பள்ளியில் ரகுமத் பள்ளிக் கட்டடம்,​​ சரஸ்வதி ராஜகோபால் தகவல்-தொழில்நுட்ப மையம்,​​ லெட்சுமி அம்மாள் திறந்தவெளி கலையரங்கம் ஆகியவற்றின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

​ ​ விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு புதிய ​ கட்டடங்களைத் திறந்து வைத்து,​​ குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

​ ​ காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் என்.சுந்தரம்,​​ திருவாடானை சட்டப் பேரவை உறுப்பினர் கேஆர்.ராமசாமி,​​ தொழிலதிபர் பிஎல்.படிக்காசு,​​ பள்ளித் தலைவர் எம்.பி.கிருஷ்ணன்,​​ பள்ளி பொருளாளர் எம்.முகம்மதுமீரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

​ ​ பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.முன்னதாக பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் ஆர்.சுவாமிநாதன் வரவேற்றார்.​ மக்கள் பிரதிநிதிகள்,​​ பெற்றோர்கள்,​​ ஆசிரியர்கள்,​​ மாணவர்கள் உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

Source:Dinamani