Nagaratharonline.com
 
NEWS REPORT: ஆஞ்சநேயரை சொல்லின் சொல்வர் என்று போற்றுவது ஏன் ?  Sep 29, 15
 
 
அசோக வனத்தில் சீதையைக் கண்ட ஆஞ்சநேயர், கண்டேன் சீதையை என்று ராமருக்கு பதிலளித்தார். சீதை உயிரோடும் கற்போடும் இருப்பதை ராமருக்கு தாமதம் இல்லாமல் தெரிவிக்க வேண்டும் என்பதே அனுமனின் நோக்கம். எனவே கண்டேன் கற்பினுக்கு அணியை கண்களால் என்ற வார்த்தையை முதலில் சொல்லி விட்டு, பிறகு கற்புடன் இருப்பதையும், யார் சொன்னதையோ கேட்காமல், தன் கண்களால் பார்த்ததையும் உறுதிப்படுத்தினார். இதனால், அனுமனுக்கு சொல்லின் செல்வர் என்ற சிறப்பு பெயர் உண்டானது.