Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரி கணேசர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு  Sep 28, 15
 
மேலைச்சிவபுரி கணேசர் கலைக் கல்லூரியில் ஆங்கிலத்துறை பிரிவில் 116 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை கல்லூரிக்கு வந்த மாணவர்களிடம் ஆங்கிலத்துறை வகுப்பறையில் ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாகவும், இதற்கு பதில் கல்லூரியின் மேற்பகுதியில் ஆங்கிலத்துறை வகுப்பறைகள் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், கல்லூரி முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையில் கல்லூரி நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறியதையடுத்து மாணவர்கள் வகுப்பறைக்குச் சென்றனர்.