Nagaratharonline.com
 
கழனிவாசலில் பட்டா மனை இடங்களுக்கு பத்திரப்பதிவுத் தடை ஆணை ரத்து  Sep 14, 15
 
காரைக்குடி கழனிவாசல் பகுதியில் பட்டா மனை இடங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பத்திரப்பதிவுத் தடை ஆணை ரத்து செய்யப்பட்டது.

காரைக்குடி அருகே கழனிவாசல் பகுதியில் சர்வே எண் 651, 652 புஞ்சை நிலத்தில் பட்டாமனை இடங்களை பத்திரப்பதிவு செய்திட கடந்த 2009 இல் தேவகோட்டை கோட்டாட்சியரால் தடை ஆணை வழங்கப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் மனை இடங்களை விற்கவும் முடியாமல், சிலர் வாங்கவும் முடியாமல் இருந்து வந்தனர். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தடை ஆணையை நீக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கக்கிளை நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களுடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விளக்கி மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றம் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகிய இருவருமந் பத்திரப் பதிவுத்தடை ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து, கழனிவாசல் பகுதியில் சர்வே எண் 651, 652 இல் உள்ள இடங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைஆணை நீக்கப்பட்டுள்ளதாக தேவகோட்டை கோட்டாட்சியர் செப்.10 இல் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தகவல்கள் காரைக்குடி வட்டாட்சியர், காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகம் 1 மற்றும் 2 ஆகிய பதிவாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.