Nagaratharonline.com
 
திருக்கோளக்குடி திருக்கோளநாதர் கோயிலில் 9ஆம் தேதி கும்பாபிஷேகம்  Sep 6, 15
 
திருக்கோளக்குடி ஆத்மநாயகி சமேத திருக்கோளநாதர் கோயிலில் வரும் 9ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலையில், பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் மற்றும் ராஜா பட்டர் ஆகியோர் தொடக்கி வைத்தனர். வாஸ்துசாந்தி பூஜைக்குப்பின், இரவு 7.15 மணிக்கு முதற்கால யாகசாலை வேள்வி நடைபெற்றது. திங்கள்கிழமை காலை 9.15 மணிக்கு 2 ஆம் கால யாகசாலை பூஜையும், மாலை 6 மணிக்கு 3 ஆம் கால யாகபூஜையும், செவ்வாய்க்கிழமை(செப்.8) காலை 8.45 மணிக்கு 4 ஆம் கால யாகபூஜையும், மாலை 6 மணிக்கு 5 ஆம் கால யாகபூஜையும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக நாளான செப்.9 ல் காலை 6 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று 7 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும். இரவு 7 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், இரவு 8 மணிக்கு ஐம்பெரும் கடவுளார் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.