Nagaratharonline.com
 
திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் கோயிலில் 108 கலச பூஜை  Aug 30, 15
 
திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளமிய நாராயணப் பெருமாள் கோயிலில் பவித்ர பூஜையை முன்னிட்டு, புதன்கிழமை 108 கலசாபிஷேகம் நடைபெற்றது.

திருக்கோயில்களில் நடைபெறும் பூஜை மற்றும் விசேஷங்களில் ஏதேனும் குறைபாடு இருப்பின், ஆண்டுதோறும் பவித்ர பூஜையின் மூலம் அதை நிவர்த்தி செய்து கொள்வது வழக்கம். அதன் பொருட்டு, திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் கோயிலில் இப்பூஜை நடத்தப்பட்டது.இதில், 108 கலசங்கள் சன்னதி திருமாமணி மண்டபத்தில் அமைக்கப்பட்டு, அதில் திருமஞ்சனம், யானை வலது கொம்பு மண், பாம்பு புற்று மண், காளை வலது கொம்பு மண், ஆற்று மண், வயல் நண்டு வளை மண், பாம்புக்கண் பச்சிலை உள்ளிட்ட 108 திரவியங்களால் உற்சவருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.