Nagaratharonline.com
 
பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில் தேரோட்ட விழா  Jul 28, 15
 
பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில் தேரோட்ட விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பூம்புகாரிலிருந்து வணிகம் செய்ய தன் மனைவி கண்ணகி மற்றும் சமணத்துறவி கவுந்தியடிகளுடன் மதுரைக்கு புறப்பட்ட கோவலன் தங்கி இளைப்பாறி, வழிபட்டுச் சென்றதாக கூறப்படும் சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் கடந்த 19-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கியது.

விழாவில் சிறப்பு அபிஷேக அலங்காரத்திற்கு பின் பக்தர்கள் வடம் பிடிக்க புறப்பட்ட தேர் கோயிலை வலம் வந்து நிலையை அடைந்தது. விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.