Nagaratharonline.com
 
தேவகோட்டை நால்வர் கோயிலில் சுந்தரர் குருபூஜை  Jul 24, 15
 
தேவகோட்டை நால்வர் கோயிலில் சுந்தரர் குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் குருபூஜை, கவிஞர் அரு. சோமசுந்தரன் தலைமையில் நடைபெற்றது. கயிலைமணி இறைவணக்கம் பாடினார். ஏழாம் திருமுறை கருத்தரங்கில், பேராசிரியர் சுப்பையா, சபா அருணாச்சலம், கவிஞர் உமா, காசிநாதன் ஆகியோர் உரையாற்றினர். மேலும், பேராசிரியர் சுப்பையா மற்றும் உமா சுப்பையா ஆகியோர் உருவாக்கியுள்ள வெள்ளி ஏட்டில் எழுதப்பெற்ற அபிராமி அந்தாதியினை, அரு. சோமசுந்தரன் வெளியிட்டார். செயலர் வள்ளியப்பன் நன்றி கூறினார்.