Nagaratharonline.com
 
ஆலங்குடி கோயிலில் குருப்பெயர்ச்சி விழா  Jul 5, 15
 
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடியில் உள்ள குரு பரிகாரத் தலமான ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குருப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.

நிகழாண்டு குரு பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 11.02 மணிக்கு பிரவேசம் செய்கிறார். இதையொட்டி, இந்தக் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறவுள்ளது.

ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் மட்டுமல்லாது, இதர ராசிக்காரர்களும் குரு பகவானை தரிசனம் செய்து பரிகாரம் செய்து கொள்ளலாம்.