Nagaratharonline.com
 
பரியாமருதுபட்டி சேவுகப் பெருமாள் கோயில் தேரோட்டம்  Jun 30, 15
 
நெற்குப்பை பரியாமருதுபட்டி ஸ்ரீசேவுகப்பெருமாள் கோயிலில் ஆனி உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த கோயிலில் ஆனி உற்சவ விழா ஜூன் 21ஆம் தேதி தொடங்கி தினமும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. 25ஆம் தேதி துவார் கிராம மண்டகப்படியாரால் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை 9ஆம் திருநாளாக திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு பூரண புஷ்கலா சமேத சேவுகப்பெருமாள் திருத்தேர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பகல் முழுவதும் பக்தர்கள் சுவாமி தரிசனமும், அர்ச்சனை தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சுற்றுப்புற கிராம மக்கள் வடம் பிடிக்க திருத்தேர் வலம் வந்தது.

பக்தர்கள் பலர் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் தேர் வலம் வந்த பாதை முழுவதும் மாங்கனிகளை சூறை விட்டனர். சுகாதாரப் பணிகளை நெற்குப்பை பேரூராட்சியினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நெற்குப்பை காவல் துறையினர் மேற்கொண்டிருந்தனர்.