Nagaratharonline.com
 
பரியாமருதுபட்டி ஸ்ரீ சேவுகப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்  Jun 27, 15
 
நெற்குப்பை பரியாமருதுபட்டி ஸ்ரீ சேவுகப் பெருமாள் கோயிலில் ஆனி உற்சவத்தை முன்னிட்டு, திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்குள்பட்டதும், ராணி மதுராந்தக நாச்சியார் ஆளுகைக்குள்பட்டதுமான நெற்குப்பை பரியமருதுபட்டி பூரண புஷ்கலா தேவி சமேத ஸ்ரீ சேவுகப்பெருமாள் கோயிலில் ஆனி உற்சவ விழா, கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது. தினமும், சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

கடந்த 25 ஆம் தேதி, துவார் கிராம மண்டகப்படியார்களால் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக, இரவு 8 மணிக்கு பூரண புஷ்கலா சமேத சேவுகப் பெருமாள் திருமண ஊஞ்சல் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், சாமிக்கு திருப்பூட்டு வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு 9 மணிக்கு சாமி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 29 இல் திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.