Nagaratharonline.com
 
NEWS REPORT: சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் பிறந்தநாள் விழா  Jun 24, 15
 
கவிஞர் கண்ணதாசன் பிறந்த சிறுகூடல்பட்டியில் அவரது 89 ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர் பாரதி இலக்கிய கழகமும், வாசகர் வட்டமும் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தன. காலை 9 மணிக்கு கண்ணதாசனின் இஷ்ட தெய்வமான மலையரசி அம்மனை வணங்கி கோயில் அருகேயுள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர். பின்னர், அவரது நினைவு இல்லத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

அங்கு கவியரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. புலவர் மெய்யாண்டவர், முன்னாள் காவல் துணைக் கண்காணிப்பாளர் கவிஞர் பேனா மனோகரன், கவிஞர் சுகன்யா, தமிழாசிரியர் சாம்ராஜ், கவிஞர் கோவிந்தராஜன், ஆகியோர் கண்ணதாசனின் காலத்தால் அழியாத காவியங்கள் குறித்து கவிதைத் தொகுப்பு நிகழ்த்தினர்.