Nagaratharonline.com
 
நெற்குப்பையில் மாவட்ட கபாடி போட்டி  Mar 2, 10
 
நெற்குப்பையில் மாசி மகத்தையொட்டி மாவட்ட கபாடி போட்டி நடைபெற்றது.

​ ​ 2-ம் ஆண்டு நடைபெற்ற கபாடி போட்டியைத் தமிழ்நாடு அமைச்சூர் கபாடி கழகத் தலைவர் ஏ.வி.நாகராஜன் துவக்கி வைத்தார்.

​ ​ போட்டியில் மதுரை,​​ புதுக்கோட்டை,​​ சிவகங்கை,​​ திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து 24 அணிகள் கலந்து கொண்டன.​ இதில் சிவகங்கை மாவட்டம்,​​ அரசினம்பட்டி அணியினர் முதல் பரிசையும்,​​ புதுக்கோட்டை மாவட்டம்,​​ ஏனாதி அணியினர் இரண்டாம் பரிசையும்,​​ தேவகோட்டை அணியினர் மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.

​ ​ வெற்றிபெற்ற அணியினருக்கு ரொக்கப்பரிசு மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.​ போட்டிக்கான ஏற்பாடுகளை நெற்குப்பை இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.​ ​

source : Dinamani